ADVERTISEMENT

அதிமுக மாநிலச் செயலாளர் அதிகாலையில் திடீர் கைது

09:57 AM Dec 28, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த அதிமுகவின் எடப்பாடி அணியைச் சேர்ந்த மாநிலச் செயலாளர் அன்பழகனை புதுச்சேரி போலீசார் அதிகாலையில் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரியில் அரசு நிர்வாகம் நடத்துவது தொடர்பாக பல்வேறு சிக்கல்கள், தடங்கல்கள் இருப்பதால் தங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும், ஆனால், மத்திய அரசு இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் முதல்வர் ரங்கசாமி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி அதிமுகவின் எடப்பாடி அணியைச் சேர்ந்த மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று ஒரு நாள் கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இந்தப் போராட்டத்திற்கு அவரது கட்சியைச் சேர்ந்த மற்ற நிர்வாகிகள் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. மேலும், பண்டிகைக்காலம் என்பதால் இந்த கடையடைப்பை தள்ளி வைக்குமாறு திமுக, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பாக கோரப்பட்டது. ஆனால், மாநிலச் செயலாளர் அன்பழகன் திட்டமிட்டபடி கடையடைப்பு நடக்கும் என அறிவித்திருந்தார்.

இதனையடுத்து திமுக சார்பில் புதுச்சேரியில் முழு அடைப்பு நடத்தக்கூடாது என டிஜிபியிடம் மனு அளித்த நிலையில் புதுச்சேரி போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக இன்று அதிகாலை அன்பழகனை கைது செய்துள்ளனர். மேலும், புதுச்சேரியில் வழக்கம்போல பேருந்துகள், கடைகள் செயல்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT