ADVERTISEMENT

இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி- 50!

08:34 AM Dec 17, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

பி.எஸ்.எல்.வி. சி- 50 ராக்கெட் மூலம் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் இன்று (17/12/2020) மாலை விண்ணில் ஏவப்படுகிறது.

ADVERTISEMENT

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று (17/12/2020) மாலை 03.41 மணிக்கு பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி- 50.

தகவல் தொடர்புக்கான சி.எம்.எஸ்- 01 செயற்கைக்கோளை சுமந்து செல்கிறது பி.எஸ்.எல்.வி. சி -50 ராக்கெட். தகவல் தொடர்பு வசதிக்கான சி-பேண்ட் அலைக்கற்றை பயன்பாட்டிற்காக சி.எம்.எஸ்-01 வடிவமைக்கப்பட்டுள்ளது. சி- பேண்ட் மூலம் பெறப்படும் அலைவரிசையை இந்திய பரப்பு, அந்தமான் நிகோபார், லட்சத்தீவுகளிலும் பயன்படுத்தலாம். 6 ஸ்ட்ராப் ஆன்ஸ் தொழில் நுட்பத்தில் அனுப்பப்படும் 22- வது பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் இதுவாகும்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT