Skip to main content

விண்ணில் பாயத் தயாராகும் சந்திரயான்-3; தேதியை அறிவித்த இஸ்ரோ

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

 Chandrayaan-3 getting ready for launch; ISRO announced the date

 

சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவதற்கான தேதியை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

 

நிலவில் ஆய்வு செய்வதற்கான முன்னெடுப்புகளை உலக நாடுகள் பலவும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா சார்பில் சந்திரயான்-3 என்ற விண்கலம் ஏவப்பட இருக்கிறது. இதற்கான தயாரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டு வருகிறது.

 

இதற்கு முன்பாகவே 2008 ஆம் ஆண்டு சந்திரயான்-1, 2019-ல் சந்திரயான்-2 ஆகியவை விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது. 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 நிலவில் இறங்கும்போது அதன் ரோவர் பகுதியில் ஏற்பட்ட சேதத்தின் காரணமாக முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை. இந்நிலையில் சந்திரயான்-3 என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த விண்கலமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சந்திரயான்-3 விண்கலம் வரும் ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்