உபி கிழக்கு பகுதி பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி, அமேதியின் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்த பாஜக சதி செய்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ராகுல் காந்தி உபி-யிலுள்ள அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இராணியை எதிர்த்து போட்டியிடுகிறார். அதற்காக பிரியங்கா காந்தி அமேதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொள்கிறார். அங்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து உற்சாகமாக பேசிக் கொண்டிருந்த பிரியங்கா காந்தியுடன் தொண்டர்கள் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.
“கடந்த ஐந்து வருடங்களாக பாஜக அமேதியில் பல திட்டங்களை கொண்டுவராமல் தடுத்து நிறுத்து இடையூறு ஏற்படுத்தியுள்ளது. ஐஐஐடி பள்ளியை அமைக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளது. ராகுல் காந்தி ஒரு இந்தியன் அல்ல என்கிறார்கள்” என்று கூறினார். “ராகுல் காந்தி உங்களுக்காகதான் உழைக்கிறார், உங்களின் நல்ல வாழ்விற்காகதான் உழைக்கிறார்” என்றார்.
ADVERTISEMENT
Show comments