ADVERTISEMENT
ADVERTISEMENT
டெல்லியில் நடைபெற்ற அசாம் மாநில புத்தாண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு இசைக்கருவிகளை உற்சாகமாக வாசித்து மகிழ்ந்தார்.
அசாம் மக்களின் புத்தாண்டு தினமாகக் கருதப்படும் ரோங்காலி பிஹூ என்ற திருவிழா டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் சோனோவாலின் இல்லத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அசாமின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி மற்றும் இசை நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தார். அப்போது அங்கிருந்த இசைக்கருவிகளையும் மேடையில் ஏறி வாசித்து மகிழ்ந்தார். பிரதமர் மோடி இசை வாத்தியங்களை உற்சாகமாக வாசித்த காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Show comments