ADVERTISEMENT

தமிழக தீயணைப்பு வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்!

07:56 PM Aug 14, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

75வது சுதந்திர தினத்தையொட்டி, தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல்படை வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக தீயணைப்புப் படையைச் சேர்ந்த நான்கு பேருக்கு சிறந்த சேவைக்கான பதக்கத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஆறுமுகம் ராமச்சந்திரன், கூத்தன் பஞ்சவர்ணம், பரமசிவம் கந்தசாமி, ரங்கராஜன் ராமச்சந்திரன் ஆகிய நான்கு வீரர்களுக்கு இந்த பதக்கம் வழங்கப்படவுள்ளது.

இதேபோன்று, தமிழ்நாட்டு காவல்துறையின் 27 அலுவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான காவல் விருதுகள் சென்னை கூடுதல் காவல்துறை இயக்குநர் கி.சங்கர், சென்னை காவல்துறைத் தலைவர் சி.ஈஸ்வரமூர்த்தி, சேலம் காவல்துறை துணை ஆணையாளர் ம.மாடசாமி ஆகியோருக்கு கிடைத்துள்ளன.

இதர 24 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்கப் பணிக்கான காவல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT