Skip to main content

"ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி இந்திய சுதந்திரம்"- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை!

Published on 14/08/2022 | Edited on 14/08/2022

 

"The greatest victory of democracy is India's freedom"- President Draupadi Murmu's speech!

 

75வது சுதந்திர தினத்தையொட்டி, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (14/08/2022) இரவு 07.00 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 

 

அப்போது குடியரசுத் தலைவர் கூறியதாவது, "இந்த அற்புதமான நாளில் உங்களிடம் உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். நாட்டிற்காக தியாகம் செய்த அத்தனை சுதந்திர போராட்ட வீரர்களையும் நான் நினைவுக் கூர்கிறேன். இந்திய சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கு அளப்பரியது. 

 

நமது மூவண்ண தேசியக் கொடி நாடு முழுவதும் பெருமையுடன் ஒவ்வொருவரின் வீட்டிலும் பறக்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த பழங்குடியினர், நாட்டின் பெருமையின் அடையாளங்களாக இருக்கின்றனர். இந்தியாவில் ஆரம்பத்தில் இருந்தே பெண்களுக்கான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்தியா ஒருபோதும் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை மறக்காது. 

 

2047-  ஆம் ஆண்டு நமது அத்தனை சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்கியிருக்க வேண்டும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிக் கொண்டு மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை செய்து காட்டி இருக்கிறோம். 200 கோடி தடுப்பூசிச் செலுத்தி வளர்ந்த உலக நாடுகளை விட பல படி முன்னோக்கி சென்று இருக்கிறோம். 

 

கரோனா தொற்றின் காரணமாக, உலக நாடுகள் பலவும் பொருளாதார பிரச்சனைகளை சந்தித்த போது, இந்தியா அதில் இருந்து விரைவில் மீண்டது. மீண்டு வரும் நமது பொருளாதாரம், ஏழைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பேருதவியாக இருக்கிறது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பொருளாதார நிலையை உணர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 

 

கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நல்லாட்சிக்கான மாற்றங்கள். புதிய இந்தியாவின் தன்னம்பிக்கைகளாக இளைஞர்கள், விவசாயிகள், குறிப்பாக பெண்கள் இருக்கின்றனர்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜினாமா!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
Punjab Governor banwarilal Purohit resigns

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் தனது ராஜினமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பினார். அந்த கடிதத்தில், எனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும், வேறு சில கடமைகளின் காரணமாகவும், பஞ்சாப் ஆளுநர் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி ஆகிய பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். தயவு செய்து இந்த கடிதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பன்வாரிலால் புரோகித் முன்னதாக அசாம், மேகாலயா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆளுநராகவும் பணியாற்றி உள்ளார். இவர் 14 வது தமிழ்நாடு ஆளுநராக கடந்த 2017  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி முதல்  2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி வரை வரை பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. 

Next Story

டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றிய குடியரசுத் தலைவர்!

Published on 26/01/2024 | Edited on 26/01/2024
The President hoisted the national flag in Delhi

நாட்டின் 75வது குடியரசு தின விழா இன்று (26.01.2024) கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதனையொட்டி டெல்லியில் குடியரசு தின விழா களைக்கட்டியுள்ளது. அந்த வகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் குடியரசுத் தலைவரின் மெய்க்காப்பாளர்கள் உடன் குதிரை வண்டியில் கடமைப் பாதைக்கு வந்தனர். அப்போது பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 21 குண்டுகள் முழங்க மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர்  பாதுகாப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். இவ்விழாவின் ஒரு பகுதியாக நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள், முப்படைகளின் வாகன அணிவகுப்பு, விமானப்படையின் சாகசங்கள் மற்றும் ராணுவ பலத்தை பறைசாற்றும்  ஆகியவை நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவிற்கு வெளிநாட்டுத் தலைவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவதும் வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார். இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு பெண்களை மையமாக வைத்து, இந்திய இசைக்கருவிகளுடன் 100 பெண் கலைஞர் பங்கேற்றுள்ளனர். பிரான்ஸ் அணியினரும் இந்த அணிவகுப்பில் பங்கேற்றுள்ளனர் குடியரசு தின விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து 75 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

vck ad

முன்னதாக நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பிரதமர் மோடி தேசியப் போர் சின்னத்திற்கு வருகை தந்தார். அப்போது அவரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தேசியப் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் முப்படைகளின் தளபதிகள், மத்திய அமைச்சர்கள் உடன் இருந்தனர்.