டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்துவரும் நிலையில் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாத் கிஷோர், அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 21 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், டெல்லியில் பல இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்று வருகிறது. ஆட்சியமைக்க தேவையான 36 இடங்களை விட அதிக தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலையில் இருக்கும் சூழலில், ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் பரப்புரை வியூகங்களை வகுத்து கொடுத்திருந்த பிரசாந்த் கிஷோர், அரவிந்த் கெஜ்ரிவாலை ஆம் ஆத்மி அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Show comments