ADVERTISEMENT

24 மணி நேரத்தில் 67 போலிஸாருக்கு கரோனா தொற்று!

05:50 PM Jun 30, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

ADVERTISEMENT

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு அதிகப்படியாக இருந்து வருகின்றது. 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அம்மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 67 போலிசாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 1,097 காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT