ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே, பிரதமர் மோடியின் நாடாளுமன்ற அலுவலகம் வாரணாசி தொகுதியில் செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில், மோடியின் அலுவலகத்தை, புகைப்படம் எடுத்த சிலர், அதனை 'ஓ.எல்.எக்ஸ்' என்னும் இணைய விற்பனை தளத்தில் விற்க முயன்றுள்ளனர். அந்த அலுவலகத்தினை நான்கு அறைகள், நான்கு குளியல் அறைகள் கொண்ட, 6,500 சதுர அடி கொண்ட 'வில்லா' எனவும், அதன் விலை 7.5 கோடி எனவும் விளம்பரம் செய்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்த வாரணாசி போலீசார், நான்கு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ADVERTISEMENT
Show comments