ADVERTISEMENT
ADVERTISEMENT
கேரளாவில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்திலிருந்து தற்போது மீண்டுவருகிறது. கேரளாவில் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னரே கேரள முதல்வர் பினராயி விஜயன் அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கபட்டிருந்தது. ஆனால் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தால் அவரது அமெரிக்க சிகிச்சை பயணம் மேற்கொள்ள முடியாமல் போனது.
இந்நிலையில் கேரள முதல்வர் வரும் 3-ஆம் தேதி அமெரிக்கா போகவிருக்கிறார் என்ற செய்தி வெளியானது. அங்கு சென்று அவர் மூன்று வாரங்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறவிருக்கிறார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தற்போது அவர் அமெரிக்கா புறப்பட்டார். அவர் கவனித்து வந்த பொறுப்புகளை தொழில்துறை மந்திரி ஜெயராஜன் கவனிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
Show comments