இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், அணியில் இருந்து நீண்ட காலத்திற்கு முன்பே கழட்டிவிடப்பட்டாலும் ஓய்வை அறிவிக்காமல் இருந்து வந்தார். இந்தநிலையில் அவர் விரைவில் ஓய்வை அறிவித்துவிட்டு, ஐபிஎல் அணியின் பயிற்சியாளர் குழுவில் சேரப்போவதாகத் தகவல் வெளியானது.
அதனைத்தொடர்ந்து பஞ்சாப் தேர்தலையொட்டி, யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங்கை பாஜக குறி வைப்பதாகவும், விரைவில் இவர்கள் இருவரும் பாஜகவில் இணையலாம் எனவும் தகவல் வெளியானது. ஆனால் அது பொய் செய்தி என ஹர்பஜன் சிங் திட்டவட்டமாக மறுத்தார்.