ADVERTISEMENT

ஜனவரி 31-ல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!

01:01 PM Jan 14, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31- ஆம் தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்க உள்ளது. நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றவுள்ள குடியரசுத்தலைவரின் உரையில் பல்வேறு தொலைநோக்கு திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜனவரி 31- ஆம் தேதி முதல் ஏப்ரல் 8- ஆம் தேதி வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், பிப்ரவரி 1- ஆம் தேதி அன்று 2022- 2023 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

ஜனவரி 31- ஆம் தேதி முதல் பிப்ரவரி 11- ஆம் தேதி வரை முதற்கட்டமாகவும், மார்ச் 14- ஆம் தேதி முதல் ஏப்ரல் 8- ஆம் தேதி வரை இரண்டாவது கட்டமாகவும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT