ADVERTISEMENT

"விவாதிக்க மறுக்கும் மத்திய அரசு..முதன் முறையாக ஒன்றுபடும் எதிர்க்கட்சிகள் - எம்.பி சு.வெங்கடேசன் டூவிட்!

06:34 PM Jul 27, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்பட முடியாமல் முடங்கியுள்ளன.

"நாடாளுமன்றம் செயல்படுவதற்கு, பிரதமர் அல்லது மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரில் ஒருவர் அவையில் இருக்கையில், பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதம் நடைபெற வேண்டும். உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிப்பதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்" என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்க்கட்சி எம்.பிக்களின் கூட்டம், இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, அதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு. வெங்கடேசன், தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சூலே உள்ளிட்டவர்களும், பகுஜன் சமாஜ், தேசிய மாநாட்டு கட்சி, கேரள காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.பிக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி சு. வெங்கடேசன், "மோடி அரசு பெகாசஸ் மூலம் உளவு பார்த்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில் அடுத்து கட்ட நடவடிக்கை குறித்து மக்களவையின் எதிர்கட்சித்தலைவர்களின் கூட்டம் நடைபெற்றுள்ளது. முதன் முறையாக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று படுகின்றன" என கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT