ADVERTISEMENT
அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அயோத்தியில் இன்று ராமரின் சிலையை பிரதிஷ்டை செய்யப்பட்ட புனிதமான தருணத்தில் இந்திய மக்கள் தங்கள் வீடுகளின் கூரையில் சொந்தமாக சோலார் கூரை அமைப்பை வைத்திருக்க வேண்டும் என்ற எனது தீர்மானம் மேலும் வலுப்பெற்றுள்ளது. அதன்படி இந்தியாவில் ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரை அமைக்கப்பட உள்ளது.
ADVERTISEMENT
இதற்காக 'பிரதம மந்திரி சூர்யோதயா யோஜனா' என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மின் கட்டணம் குறைவது மட்டுமின்றி, எரிசக்தி துறையில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்யும். அயோத்தியில் இருந்து திரும்பிய பிறகு நான் எடுத்த முதல் முடிவு இது” எனப் பதிவிட்டுள்ளார்.
Show comments