ADVERTISEMENT

சிறை கைதியின் முதுகில் ஓம்... சிறைத்துறை விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு

08:53 PM Apr 20, 2019 | kalaimohan

டெல்லி திகார் சிறைச்சாலையில் விசாரணை கைதியாக வந்த ஒருவருக்கு முதுகில் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் ஓம் என்று எழுதியது தொடர்பாக டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

திகார் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த முஸ்லிம் கைதி ஒருவர் முதுகில் சிறை கண்காணிப்பாளர் ராஜேஷ் சவுகான் பழுக்க காய்ச்சிய கம்பியால் ஓம் என்று எழுதினார் என குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து அந்த கைதி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனை விசாரித்த நீதிபதி இது தொடர்பாக சிறைத்துறை டிஜிபி மற்றும் சிறைத் துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சிறையில் நடந்த கொடூர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி 24 மணி நேரத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT