இந்நிலையில் ஆதித்யா எல் 1 விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. ஆதித்யா எல் 1 விண்கலத்தில் உள்ள புறஊதா கதிர் மூலம் இயங்கும் தொலைநோக்கியில் எடுத்த புகைப்படங்கள் முதல் முறையாக இஸ்ரோ சார்பில் அதிகாரப்பூர்வமான வெளியிடப்பட்டுள்ளன. மேலும் சூரியனைச் சுற்றியுள்ள குரோமோச்பியர் மண்டலத்தை வெவ்வேறு அலைநீளத்தில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக ஆதித்யா எல்1 விண்கலம் சூரிய அனல் குழம்பில் இருந்து வெளியாகும் அதிதிறன் கொண்ட எக்ஸ் கதிர்களை முதல் முறையாக படம் எடுத்து அனுப்பிய படத்தை இஸ்ரோ கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி வெளியிட்டிருந்தது. ஆதித்யா எல்1 விண்கலத்தில் உள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் என்ற கருவி இதனை பதிவு செய்துள்ளதாகவும், இந்த பதிவு எலக்ட்ரான் முடுக்கத்தை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.