Skip to main content

சாதனை பயணத்தில் ஆதித்யா எல்-1 விண்கலம்

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

Aditya L-1 spaceship on epic mission

 

இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் கடந்த 2 ஆம் தேதி காலை 11.50 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்பட்டது.

 

இந்நிலையில் இது குறித்து இஸ்ரோ எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக புவியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து வெளியே பயணித்து வருகிறது. புவியில் இருந்து 9.2 லட்சம் கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் பயணித்து லெக்ராஞ்சியன் புள்ளியை நோக்கி விண்கலம் சென்றுகொண்டிருக்கிறது.

 

ஏற்கனவே செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் திட்டத்தில் புவியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து வெற்றிகரமாக இஸ்ரோ வெளியே அனுப்பி இருந்தது. 2வது முறையாகப் புவியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து வெளியே பயணித்து ஆதித்யா விண்கலம் சாதனை படைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது. மேலும் வரும் ஜனவரி 4 ஆம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடுத்த அப்டேட் கொடுத்த ஆதித்யா எல் - 1 விண்கலம்!

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
The next update was the Aditya L-1 spacecraft

இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி (02.09.2023) காலை 11.50 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்பட்டது.

இந்நிலையில் ஆதித்யா எல் 1 விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. ஆதித்யா எல் 1 விண்கலத்தில் உள்ள புறஊதா கதிர் மூலம் இயங்கும் தொலைநோக்கியில் எடுத்த புகைப்படங்கள் முதல் முறையாக இஸ்ரோ சார்பில் அதிகாரப்பூர்வமான வெளியிடப்பட்டுள்ளன. மேலும் சூரியனைச் சுற்றியுள்ள குரோமோச்பியர் மண்டலத்தை வெவ்வேறு அலைநீளத்தில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக ஆதித்யா எல்1 விண்கலம் சூரிய அனல் குழம்பில் இருந்து வெளியாகும் அதிதிறன் கொண்ட எக்ஸ் கதிர்களை முதல் முறையாக படம் எடுத்து அனுப்பிய படத்தை இஸ்ரோ கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி வெளியிட்டிருந்தது. ஆதித்யா எல்1 விண்கலத்தில் உள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் என்ற கருவி இதனை பதிவு செய்துள்ளதாகவும், இந்த பதிவு எலக்ட்ரான் முடுக்கத்தை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ஊக்கத்தொகையை பகிர்ந்தளித்த விஞ்ஞானி வீரமுத்துவேல்

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

Scientist veeramuthuvel who distributed the incentive

 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் சாதனை திட்டங்களுக்கு முக்கிய பங்காற்றிய தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்குத் தமிழக அரசு சார்பில், ‘ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்’ என்ற தலைப்பில் பாராட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி (02.10.2023) நடைபெற்றது. இந்த விழாவிற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி உரையாற்றினார்.

 

இந்த விழாவில் தமிழக விஞ்ஞானிகளான கே. சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வி. நாராயணன், ஏ. இராஜராஜன், எம். சங்கரன், ஜெ. ஆசிர் பாக்கியராஜ், மு. வனிதா, நிகார் ஷாஜி மற்றும் ப. வீரமுத்துவேல் ஆகிய 9 பேருக்கும் தமிழக அரசு சார்பில் தலா 25 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கி பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.

 

இந்நிலையில் சந்திரயான் 3 திட்டத்தில் முக்கிய பங்காற்றிய இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை தான் படித்த 4 கல்லூரிகளுக்குப் பிரித்து வழங்கினார். அதன்படி தான் படித்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி, தனியார் பொறியியல் கல்லூரி, திருச்சி என்ஐடி, சென்னை ஐஐடி என 4 கல்வி நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகையை சமமாக பிரித்து வழங்கினார்.