ADVERTISEMENT

இந்திய பிரதமர்கள் குறித்த அருங்காட்சியகம் திறப்பு! (படங்கள்) 

06:54 PM Apr 14, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

இந்திய பிரதமர்கள் குறித்த அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இன்று (14/04/2022) தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தொடங்கி, இதுவரை உள்ள அனைத்து பிரதமர்களும் நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பை நினைவுக்கூறும் வகையில், இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் கட்சிப் பேதமோ, சித்தாந்த பேதமோ கருதாமல், அனைவரின் சேவைகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்காகப் பிரதமர்கள் பின்பற்றிய செயல் திட்டங்களையும், அவர்களின் சிந்தனைகளையும் இளம் தலைமுறையினருக்கு எடுத்துக் கூறும் வகையில், இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT