ADVERTISEMENT

5-வது முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்றது மும்பை அணி! 

11:05 PM Nov 10, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல் 2020 தொடரில், ஐந்தாவது முறையாக மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில், டெல்லி அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக மும்பை அணி வென்றுள்ளது. துபாயில், டெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது மும்பை இண்டியன்ஸ். முதலில் பேட் செய்த டெல்லி அணி, 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு, 156 ரன்கள் எடுத்த நிலையில், மும்பை 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு, 157 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடி மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெற்றிக்கு வித்திட்டார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT