நாளை மறுநாள் நடைபெறும் மக்களவை வாக்கு எண்ணிக்கையில் தான் வெற்றி பெறுவது உறுதி என்று நம்பிக்கை வைத்திருக்கும் பாஜக வேட்பாளர், முன்கூட்டியே 2 ஆயிரம் கிலோ இனிப்புகள் ஆர்டர் செய்துள்ளார்.
மும்பை வடக்கு பாராளுமன்ற தொகுதியின் எம்.பி.யாக பதவி வகிப்பவர் கோபால் ஷெட்டி. பாஜகவை சேர்ந்த இவர் இந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலிலும் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் 23-ம் தேதி மக்களுக்கு வழங்குவதற்காக 2 ஆயிரம் கிலோ இனிப்பு வகைகளுக்கு இப்போதே ஆர்டர் கொடுத்துள்ளார்.