அப்போது பேசிய பிரதமர் மோடி, 130 கோடி இந்தியர்களின் சார்பாக சபையில் பேசுவதாக தெரிவித்தார். அப்போது பேசிய அவர், "ஐநா சபை கூட்டத்தில் பேசுவது பெருமைக்குரிய ஒரு விஷயம். மிகப்பெரிய சுகாதார திட்டத்தை இந்திய அரசு நிறைவேற்றி வருகிறது. அதேபோல புவி வெப்பமயமாதலால் இயற்கை பேரிடர்கள் அதிகரித்துள்ளன. உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ இந்தியா விரும்புகிறது.
இதற்கான ஒரு திட்டமாக, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இந்திய அரசு தற்போது தடை விதித்துள்ளது. தீவிரவாதிகளுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ள சில நாடுகள், இந்தியாவை காயப்படுத்தி வருகின்றன. தீவிரவாதத்தை வேரறுக்க, அனைத்து நாடுகளும் ஓரணியில் திரள வேண்டும்" என பேசினார். இந்த உரையின் போது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கனியன் பூங்குன்றனாரின் பாடல் வரிகளை மேற்கொள் காட்டி பிரதமர் மோடி உரையாற்றினார்.