ADVERTISEMENT

வன்முறையைக் கண்டும் பிரதமர் மோடி மவுனமாகவே இருக்கிறார்... - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

03:40 PM Oct 27, 2018 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT


காங்கிரஸ் எம்.பி சசி தரூர் எழுதிய ‘தி பாரடாக்சியல் பிரைம்’ எனும் நூல் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நம் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் சூழல் தரமிழந்துள்ளதாகவும், 2014-ஆம் ஆண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடித்த பிரதமர் மோடி வாக்காளர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் தெரிவித்தார். நாட்டில் பரவலாக நடக்கும் வகுப்புவாத வன்முறை, கும்பல் வன்முறை ஆகியவற்றைக் கண்டும், கேட்டும் கருத்து தெரிவிக்காமல் மவுனமாகவே பிரதமர் மோடி இருப்பதாகவும் தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT