கிரிக்கெட் வீரர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடி தனது உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
ராஜ்யவர்தன் ரத்தோர் முதன் முதலில் ட்விட்டரில் அவராகவே புஷ் அப்ஸ் எடுத்து, அதே போன்று விராட்கோலி மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் ஆகிய பிரபலங்களுக்கு உடற்பயிற்சி செய்து ட்விட்டரில் வீடியோ வெளியிடுமாறு பதிவேற்றினார். அதை தொடர்ந்து விராட் கோலி தான் பிட்னஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டு அதில் மஹேந்திர சிங் தோனி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை உடற்பயிற்சி சவாலுக்கு அழைத்தார். அதை நரேந்திர மோடி ஏற்றுக்கொள்வதகாகவும் அப்போதே ட்விட்டரில் பதிவேற்றினார்.
பிரதமர் மோடி இன்று காலை ட்விட்டரில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் இந்த உடற்பயிற்சி தினசரி செய்வது என்றும் குறிப்பிட்டுள்ளார். யோகா செய்த பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் நடைபாதையில் நடப்பது, கடைசியில் மூச்சு பயிற்சி எடுத்துக்கொள்வேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அடுத்த பதிவில் கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கும், காமன்வெல்த் போட்டியில் பதக்கங்களை அள்ளிக்குவித்த வீராங்கனை மணிக்கா பத்ராவுக்கும், அனைத்து ஐபிஎஸ் அலுவலர்கள் நாற்பது வயதை தாண்டியவர்களுக்கும் என்று தெரிவித்துள்ளார்.