ADVERTISEMENT

சுடுகாட்டில் உறங்கிய எம்.எல்.ஏ...

02:58 PM Jun 25, 2018 | santhoshkumar

தொழிலாளர்களின் அச்சத்தை போக்க இரவில் தனியாளாக மயானத்தில் உறங்கினார் ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆந்திராவில் உள்ள கிழக்கு கோதாவரி மாவடட்டத்தின் பாலகொள்ளு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ராமா நாயுடு. இவர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர். இவரது தொகுதியில் மயானம் நவீனமாக கட்டுவதற்கு என்று ரூ 3 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் இதற்கான பணிகள் மந்தமாகவே நடந்துள்ளது. இதை அறிந்த சட்டமன்ற உறுப்பினர். அங்கு நேரில் சென்று ஆய்வு செய்து, பின்னர் தொழிலாளர்களிடம் தாமதத்திற்கான காரணத்தை விசாரித்துள்ளார்.


அப்போது அவர்கள், மயானத்தில் இரவில் பேய், பிசாசு போன்ற அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டம் இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அவர்கள் பெரிதும் அச்சத்திற்கு உள்ளாவதகவும் தெரிவித்ததை அடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு ராமானாயுடு தனியாக மயனாத்திற்கு இரவில் சென்று அங்கேயே சாப்பிட்டுவிட்டு பின் உறங்கியுள்ளார்.

இதையடுத்து தொழிலாளர்களுக்கு பயம் நீங்கிவிட்டதாக தெரிவித்துள்ளனர். கட்டுமானப் பணிகளை விரைவாக முடித்துத் தருவதாகவும் கூறியுள்ளனர்.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT