Skip to main content

“இரண்டு மாதத்தில் 11 போக்சோ வழக்குகள்” - முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் சின்னத்துரை எம்.எல்.ஏ வேதனை

Published on 29/08/2022 | Edited on 29/08/2022

 

mla chinnadhurai said 11 POCSO cases two months gandarvakottai

 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை (சி.பி.எம்) தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்கள் முதல் கடந்த ஆண்டு வரை இந்தப் பள்ளியில் படித்தவர்கள் என பலரும் கலந்து கொண்டு தங்களின் பள்ளிப் பருவ சம்பவங்களை நினைவூட்டி நெகிழ்ந்தனர். பலரும் தாங்கள் படித்த வகுப்பறைகளை தேடிப் பார்த்துவிட்டு, நாங்க படிச்ச ஓட்டுக்கட்டிட வகுப்பறைகளை காணவில்லை என்றனர்.

 

இன்னும் பலர் பல வருடங்களுக்கு பிறகு சந்தித்த மகிழ்ச்சியில் கட்டியணைத்துக் கொண்டு தங்கள் குடும்பங்கள் பற்றி பேசிக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு மருத்துவர்கள், கல்வி அதிகாரிகள் என பல துறைகளிலும் வேலை செய்து ஓய்வு பெற்றவர்களும் வந்திருந்தனர். நாம் படித்த பள்ளியை மேலும் மாவட்டத்தின் முன்மாதிரி பள்ளியாக வளர்க்க வேண்டும் அதற்கு நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றனர். 

 

ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, “பள்ளிகளின் தேவைகளை எல்லாம் அரசு நிறைவேற்றிட முடியாது. ஆனால் அதை நிறைவேற்ற நாம் இருக்கிறோம் (முன்னாள் மாணவர்கள்). நம்மால் முடியும் என்பதை திட்டமிட்டு செய்வோம். ஊருக்கு ஒரு பிரதிநிதி நியமித்து தகவல்களை கொண்டு போய் சேர்ப்போம்.  இந்த தகவல்களை கொண்டு போக இந்தியாவில் இன்று வரை விலை ஏறாத போஸ்ட் கார்டுகளை பயன்படுத்துவோம்.  இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்காக நான் ரூ.1 லட்சம் தர தயாராக இருக்கிறேன்” என்றார்.

 

இந்த நிகழ்வை தலைமையேற்றிருந்த சின்னத்துரை எம்.எல்.ஏ, “கல்வி வளர்ச்சிக்காக இந்த அரசாங்கம் நிறைய செய்து வருகிறது. நான் எதிர்கட்சி எம்.எல்.ஏ என்று சொன்னார்கள். இல்லை இல்லை ஆளும் திமுகவினர்கள் ஆதரவில் வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றுள்ளேன். சட்டமன்ற உறுப்பினர் நிதியில் 30% கல்விக்காக ஒதுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கூறியிருப்பது சிறப்பாக உள்ளது. முதல்கட்டமாக சுற்றுச்சுவர் கட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.  ஆனால் ஒரு வருத்தமான செய்தி கடந்த 2 மாதங்களில் மட்டும் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 11 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இதற்கு காரணம் மாணவர்கள் இடைநிற்றலும் ஒன்று. அதனை மாற்றி கீரமங்கலம் பகுதியை போல படிப்பை கொடுத்து முன்னேற்றம் செய்ய வேண்டும். அதற்கு முதலில் முன்னாள் மாணவர்கள் சபதம் ஏற்போம்” என்றார்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Notice that Vikravandi constituency is vacant

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (06.04.2024) புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் (06.04.2024) விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். இதனையடுத்து புகழேந்தியின் உடல் நேற்று (07.04.2024) முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அதாவது போலீசார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை அளித்தனர். இதனையடுத்து சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. 

Notice that Vikravandi constituency is vacant

இந்நிலையில், புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப் பேரவை செயலகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே தேதியில் (19.04.2024) இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

எம்.எல்.ஏ புகழேந்தி மறைவு; தமிழக முதல்வர் இரங்கல்

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Condolence of Tamil Nadu Chief Minister MLA Pugazhendi passed away

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைந்த புகழேந்திக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்புச் சகோதரர் புகழேந்தி எதிர்பாராத வகையில் மறைவுற்ற நிகழ்வு, மிகவும், அதிர்ச்சியும் வேதனை தருகிறது. கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர், தன் உடல்நலன் பற்றியெல்லாம் சிந்திக்காமல் கழகத்தின் வெற்றிக்காகத் தேர்தல் பணிகளை ஆற்றி வந்தார். 

நேற்றைய என்னுடைய பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவர், சற்றே மயக்கம் வர, மருத்துவமனைக்குச் சென்றார். உடனடியாக நானும் மருத்துவர்களைத் தொடர்புகொண்டு, அவரது உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். நலன் பெற்று மீண்டு வருவார் என்று நம்பியிருந்த நிலையில், அவர் நம்மைவிட்டு பிரிந்த செய்தி வந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

1973-இல் கழகத்தின் கிளைச் செயலாளராகத் தமது அரசியல் வாழ்வைத் தொடங்கிய புகழேந்தி, தமது அயரா உழைப்பாலும், மக்கள் பணியாலும் படிப்படியாக வளர்ந்து, கழகத்தின் மாவட்டச் செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் உயர்ந்தார். 1996-இல் ஒன்றியத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான பணிகளை மேற்கொண்டவர். விக்கிரவாண்டி தொகுதி மக்களோடு, மக்களாக இருந்து அவர்களுக்கான அனைத்துப் பணிகளையும் அக்கறையுடன் மேற்கொண்டு வந்த புகழேந்தியை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்து அந்த மக்கள் அனுப்பி வைத்தனர். 

எப்போது என்னைச் சந்திக்க வந்தாலும், தொகுதி மக்களுக்கான கோரிக்கைகளுடன்தான் வருவார். அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுச் செல்வார். கழகத் துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடிக்கு உற்ற துணையாக விளங்கி மக்களோடு மக்களாக வாழ்ந்த புகழேந்தியின் மறைவு, விக்கிரவாண்டி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கும் மட்டுமின்றி, கழகத்திற்கும் பேரிழப்பாகும். ஈடுசெய்ய முடியாத அவரது பேரிழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.