ADVERTISEMENT

‘வீடியோவை வெளியிடுவோம்’ - சிறுமியை மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை

04:10 PM Mar 07, 2024 | mathi23

கர்நாடகா மாநிலம், துமகூரு மாவட்டத்தில் சித்தகங்க மடத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவைக் காண சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கொள்வர். அந்த வகையில், இந்த மடத்தில் கடந்த 4 ஆம் தேதி திருவிழா நடைபெற்றுள்ளது.

ADVERTISEMENT

இந்த விழாவுக்கு, 18 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவர் தன்னுடைய நண்பருடன் பங்கேற்க சென்றுள்ளார். அதன் பின்னர், அருகே உள்ள மலை உச்சிக்குத் தனது நண்பருடன் சென்று அமர்ந்து பேசியபடி இருந்துள்ளார். இதனை கவனித்த அங்கிருந்த 3 பேர், அவர்கள் இருவரும் அமர்ந்து பேசியதை தூரமாக நின்று தங்கள் செல்போன் மூலம் வீடியோவாக எடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

அதன் பிறகு, அந்த 3 பேரும் அவர்களிடம் சென்று மிரட்டியுள்ளனர். மேலும், இந்த வீடியோவை பொதுவெளியில் வெளியிடுவோம் என்று கூறி அந்த சிறுமியை அச்சுறுத்தியுள்ளனர். இதனால், அவர்கள் இருவரும் செய்வதறியாது பயந்து போயுள்ளனர். இதனைப் பயன்படுத்தி, அந்த சிறுமியை மட்டும் பந்திபாளைய பகுதிக்குத் தனியாக இழுத்துச் சென்ற 3 பேரும், அங்கு வைத்து சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகள் 3 பேரையும் தீவிரமாகத் தேடி வந்தனர். இதனையடுத்து, அவர்கள் இருப்பிடத்தை தெரிந்து கொண்ட போலீசார், 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT