ADVERTISEMENT

முடிவெட்ட மெடிக்கல் சர்டிபிகேட்... கரோனாவால் நேர்ந்த அவலம்!

05:24 PM Mar 17, 2020 | suthakar@nakkh…

சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. இருந்த போதிலும் இதுவரை இந்தியாவிலும் 126 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை இந்திய அரசாங்கம் தற்போது உறுதி செய்துள்ளது.

ADVERTISEMENT


ADVERTISEMENT


இந்நிலையில் இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட மராட்டிய மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகின்றது. இதற்கிடையே அம்மாநிலத்தில் உள்ள சலூன்களில் முடிவெட்ட செல்பவர்கள் மருத்துவ சான்றிதழோடு செல்ல வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. முடி திருத்துபவர்கள் முடிவெட்ட வருபவர்களின் அருகிலேயே நிற்க வேண்டி உள்ளதால் சலூனுக்கு வருபவரகள் தங்களுக்கு கரோனா இல்லை என்று சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே அவர்களுக்கு முடிவெட்டுவோம் என்று முடிதிருத்துபவர்கள் முடிவெடுத்துள்ளார்கள். இந்த விவகாரம் மராட்டியத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT