வட இந்தியாவில் மிக பிரபலமான பண்டிகையான ஹோலி பண்டிகை நேற்று வடமாநிலங்கள் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். ஒருவர் மேல் ஒருவர் கலர் பொடிகளை பூசி கொண்டாடும் இந்த விழாவின் ஒரு பகுதியாக தீய சக்திகளை எரிக்கும் நிகழ்வு நடைபெறும். அந்த வகையில் நேற்று மும்பையின் ஒர்லி பகுதியில் நடைபெற்ற விழாவில் புல்வாமா தாக்குதலுக்கு காரணமான மசூத் ஆசாரின் உருவபொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் பப்ஜி கேமில் வரும் உருவம் பொறித்த பொம்மைகளும் அப்போது எரிக்கப்பட்டன.
Show comments