ADVERTISEMENT

கரோனா அறிகுறி உடையவரை பைக்கில் மருத்துவமனை அழைத்துச் சென்ற அரசியல்வாதி!

05:36 PM Aug 13, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவிக்கொண்டுள்ளது. ஆரம்பத்தில் குறைவான பாதிப்பு இருந்த மேற்குவங்கத்திலும் தற்போது பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஒருவர் கரோனா அறிகுறியுடன் இருந்த நபரை பாதுகாப்பு உடை அணிந்து மருத்துவமனை கொண்டு சேர்த்துள்ளார். இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT