ADVERTISEMENT

மொபைல் ஃபோன் வாங்க பத்தாயிரம் தரும் மம்தா!

05:15 PM Dec 24, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா தொற்றுப் பரவலால், இந்தியா முழுவதுமுள்ள பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வியைப் பெற உதவும் வகையில், அவர்களுக்கு நவீன மொபைல் ஃபோன்கள் வாங்க, பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 9.5 லட்சம் மாணவர்களுக்கு, ரூபாய் 10,000 ஆயிரம் வழங்கப்படும் எனவும், மூன்று வாரத்திற்குள் மாணவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT