Skip to main content

மோடியை மிரள வைக்கும் லேடி டைகர்! - முதல்வரைத் தெரியுமா? #1  

Published on 23/04/2018 | Edited on 30/04/2018
Mudhalvarai theriyuma title

 

'சாமி' பேருக்கே அர்ச்சனை செய்யச் சொல்லும் முதல்வரை நமக்குத் தெரியும். பல சாமிகளை மிரள வைக்கும் முதல்வரைத் தெரியுமா? சாமி கோவிலில் சமூக சமநிலை நிலைநாட்டிய முதல்வரை நமக்குத் தெரியுமா? தன் மாநிலத்துக்கென தனி கொடி கண்ட முதல்வரைத் தெரியுமா? ஒவ்வொருவராகத் தெரிந்துகொள்வோம்...

29 வயது இளம் பெண் இவர். 55 வயதைக் கடந்த பொதுவுடமை கட்சியின் மூத்த தலைவர் அவர், அகில இந்தியாவுக்கும் தெரிந்த தலைவர். அவரை எதிர்த்து இவரை நாடாளுமன்ற தேர்தலில் நிறுத்தியது காங்கிரஸ் கட்சி. சின்னப்பொண்ணு, இது போய் மலையை சாய்க்குமா என சொந்த கட்சியிலேயே ஏளனம் பேசியவர்கள் ஏராளம். இவர் பயந்துவிடவில்லை, மலையை எதிர்க்க தயக்கம் காட்டவில்லை, சூறாவளி பிரச்சாரம்; இடதுசாரிகளை எதிர்த்து அதுவரை யாரும் பேசாத பேச்சுகளைப் பேசினார். நீங்கள் மக்களின் தோழனல்ல என்றார். அவரின் பேச்சு மக்கள் மனதை மெல்ல அசைத்தது. தேர்தல் முடிவு, எதிர்த்துப் போட்டியிட்ட மலையை விட சுமார் 29 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் இளம் வயது எம்.பியாக 1984ல் இவரை அமர்த்தியது. இவர் மம்தா பானர்ஜி. அரசியலுக்கு மிக இளம் பெண்ணான இவரிடம் தோற்ற அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், பிற்காலத்தில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராக இருந்தவருமான சோம்நாத் சட்டர்ஜி.
 

young mamta


மலையை மடுவால் அசைக்க முடியும் என இளம் வயதிலேயே நிரூபித்தவர்,அதன் பின் அசைத்ததெல்லாம் குன்றுகளையல்ல, மலைகளைத்தான். வங்காளம் என்றாலே வரலாறுகள்தான். இந்தியாவின் வரலாற்று பக்கங்களை அரசியல், சமூகம், பொருளாதாரம், சமயம், கலை, உணவு என எந்தப் பிரிவுகளில் எழுதுவதாக இருந்தாலும் மேற்குவங்கத்தை தவிர்த்துவிட்டு எழுதவே முடியாது. அரசியல் புரட்சியாளர்களை, சமூக புரட்சியாளர்களை, மதபுரட்சியாளர்களை இந்தியாவுக்குத் தந்த மண் மேற்குவங்கம். அரசியலில் சுபாஷ்சந்திரபோஸ், பிபின்சந்திரபால், சித்தரஞ்சன்தாஸ், சமூக புரட்சி செய்த ராஜாராம் மோகன்ராய், ரவிந்திரநாத்தாகூர், மதத்தலைவர்கள் ராமகிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்தர், கலையில் சத்தியஜித்ராய் போன்றவர்களை பெற்ற மாநிலம் மேற்குவங்காளம்.

 

somnath chatterjee

சோம்நாத் சட்டர்ஜி

மேற்குவங்க மக்கள் அமைதியானவர்கள், அடுத்தவர்களுக்கு உதவியென்றால் ஓடி வந்து முன் நிற்பார்கள். மக்களுக்கு எதிரான விவகாரம் என்றால் மக்கள் பொங்கிவிடுவார்கள். அதிரடியைத் தான் அந்த மாநிலம் விரும்பும். அதனால் தான் காந்தியை விட சுபாஷ் சந்திரபோஸைக் கொண்டாடினார்கள். அந்த வரிசையில் தான் மத்தியில் மதவாத, மக்கள் விரோத ஆட்சியை நடத்தும் மோடி ஆட்சியை எதிர்த்து கடும் குரல் கொடுத்து லேடி டைகர் என்கிற பெயரை பெருகிறார் பெங்காலின் முதல்வர் 'தீதி' மம்தாபானர்ஜி.

மேற்குவங்க அரசியல்

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது வங்காளத்தில் மத மோதல்கள் உருவாயின. அப்போது இந்துக்கள் அதிகமிருந்த பகுதி மேற்கு வங்கம் எனவும், இஸ்லாமியர்கள் அதிகமிருந்த பகுதி கிழக்கு வங்கம் என்கிற பெயரிலும் பிரிக்கப்பட்டது. கிழக்கு வங்கம் பாகிஸ்தானோடு இணைந்தபின் அது கிழக்கு பாகிஸ்தான் என பெயர் மாற்றமடைந்தது. பின்னர் கிழக்கு பாகிஸ்தான் தனி நாடாகி வங்கதேசம் என்கிற பெயரில் உள்ளது. மேற்குவங்கத்தின் பெரு நிலக்கிழார்களின் ஆதரவை காங்கிரஸ் பெற்றிருந்தது. விவசாய கூலி மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குடன் இருந்தது கம்யூனிஸ்ட் கட்சி, தொழிலாளர்களிடமும் ஆதிக்கம் செலுத்தியது. இருந்தாலும் பெருநிலக்கிழார்கள் ஆதரவால் 1948ல் இருந்து ஆட்சி பொறுப்பில் இருந்து வந்தது காங்கிரஸ் கட்சி.

 

kolkata



1967ல் மேற்குவங்கத்தில் விவசாயிகளுக்கு மின்சாரம் கிடையாது, அனைத்து தரப்பு மக்களிடம் வரி, வரியென அதிக வரிகள் வசூலிக்கப்பட்டது. உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியது. மின்சார பற்றாக்குறையால் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. தொழிலாளர்கள் பராரியாகத் திரிந்தனர், திரும்பிய பக்கமெல்லாம் போராட்டம். இதைத் தடுக்க முடியாமல் காங்கிரஸ் அரசாங்கம் திணறியது. 'ஆண்டைகளே ஆண்டைகளே, எங்களை ஆண்டது போதும்' என குரல்கள் ஓங்கி ஒலித்தன.

 

Charu mazumdar

சாரு மஜும்தர்


மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவராக இருந்தார் சாரு மஜும்தர். வடபகுதியில் இருந்த விவசாயிகள் போராட்டக் களத்துக்கு வந்தனர். இதன் பின்னால் இருந்தது சாருமஜும்தர். போராடிய விவசாயிகளை ஆயுதம் கொண்டு அடக்கியது காங்கிரஸ் அரசாங்கம். நிலச்சீர்த்திருத்தம் வேண்டும் என்றார்கள் விவசாயக் கூலி மக்கள். நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் விவசாய நிலங்களை வைத்திருந்த நில உடமையாளர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய கூலி தொழிலாளர்களை துப்பாக்கி சூடு நடத்தி அடக்க முயன்றது.

 

naksalbari


மேற்குவங்கத்தில் குளிர்பிரதேசமான டார்ஜிலிங் அருகில் உள்ள கிராமம் நக்சல்பாரி. இந்தப் பகுதி முழுவதும் பெருநிலக்கிழார்களிடம் விவசாயத் தொழிலாளர்கள் அடிமையாக இருந்தனர், கொத்தடிமையாக நடத்தப்பட்டனர். உழைக்கும் மக்களுக்கே விவசாய நிலங்கள் சொந்தமென இடதுசாரிகள் போராட்டங்கள் நடத்தினார்கள். பெருநிலக்கிழார்களை எதிர்த்து இங்கு உருவாக்கப்பட்ட இயக்கம் நக்சல்கள் என்கிற பெயரிலேயே அழைக்கப்பட்டு பின்னர் அது பொதுப் பெயரானது. 'அரசாங்கம் ஆயுதம் தூக்கினால் நாமும் நம்மை காத்துக்கொள்ள ஆயுதம் தூக்குவோம். நம்மை காத்துக்கொள்ள, நம் உரிமைகளை பெற ஆயுதமே துணை என்றார் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்து புரட்சிகர இயக்கமான நக்சல் படையை உருவாக்கிய சாருமஜும்தர். அதன்பின் மேற்குவங்க அரசுக்கும் – நக்சல்களுக்கும் இடையே மோதல்கள் உருவாகி வறுமை தேசம், வன்முறை தேசமாக மாறியது.

 

mamta roaring



நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிலச்சீர்த்திருத்தம் கொண்டு வருவோம் என வாக்குறுதி தந்தனர் மேற்குவங்க இடதுசாரிகள். இது விவசாய கூலி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. 1977 பொதுத் தேர்தல் வந்தது. காங்கிரஸ் கட்சியை எதிர்த்து இடதுசாரி முன்னணி என்கிற பெயரில் கம்யூனிஸ்ட்கள் தேர்தலில் நின்றனர். அதுவரை மேற்குவங்கத்தில் ஆதிக்கம் செலுத்தி ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிந்தனர் மக்கள். முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தார்த் சங்கர் ராய் உட்பட பலரும் படுதோல்வி. 1948 முதல் 1977 வரை 28 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது. இடதுசாரிகள் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தனர். முதலமைச்சராக ஜோதிபாசு பதவிக்கு வந்தார். அடுத்த 22 ஆண்டுகள் இவரது ஆட்சியின் கீழ் இருந்தது மேற்குவங்கம்.


சித்தார்த் சங்கர் ராய், அதன்பின் அரசியல் செய்தாலும் படிப்படியாக ஓய்வு நிலைக்கு சென்றார். அவரால் வளர்க்கப்பட்ட மம்தா பானர்ஜி மேற்குவங்க காங்கிரஸில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகினார்.


இளம் பெண் அரசியல்வாதி வங்கப் புலியென அழைக்கப்படுமளவு உயர்ந்த கதையை வெள்ளிக்கிழமை (27-04-18) அடுத்த பகுதியில் காண்போம்...  
 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.