ADVERTISEMENT

பிரதமர் மோடி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு...

04:58 PM Jan 11, 2020 | kirubahar@nakk…

கொல்கத்தா துறைமுக சபையின் 150-வது ஆண்டு விழா இன்றும், நாளையும் கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் மோடி மேற்குவங்கம் சென்றிருக்கிறார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கொல்கத்தாவில் உள்ள பழைய கரன்சி கட்டிடம், பெல்வேடியர் இல்லம், மெட்கால்ஃப் இல்லம் மற்றும் விக்டோரியா நினைவரங்கம் ஆகிய 4 பாரம்பரியமிக்க இடங்கள் புதுப்பிக்கப்பட்ட நிலையில், அவற்றை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். இதற்காக இன்று பிற்பகல் விமானம் மூலம் மேற்குவங்கம் வந்தடைந்த பிரதமர் மோடியை மேற்குவங்க ஆளுநர் வரவேற்றார். இதனையடுத்து மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் பிரதமர் மோடி மற்றும் மம்தா பானர்ஜி சந்தித்து உரையாற்றினர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT