ADVERTISEMENT

"டெல்லி முடிவு சிறந்த பாடம்"... மம்தா பானர்ஜி பேச்சு...

03:21 PM Feb 11, 2020 | kirubahar@nakk…

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 8ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், பெரும்பாலான இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைக்க உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

டெல்லி முழுவதும் ஆம் ஆத்மி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவரும் சூழலில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்களும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, "டெல்லியில் ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களுக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள். மிகப்பெரிய வெற்றியை பெற்று டெல்லியில் ஆட்சியமைக்க உள்ள ஆம்ஆத்மி கட்சிக்கும், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். வெறுப்புணர்வுப் பேச்சு, பிரிவினை அரசியலில் ஈடுபட்டால் மக்கள் புறக்கணிப்பார்கள் என்பதை இதன்மூலம் சிலர் அறிந்திருப்பார்கள். பிரிவினை அரசியலில் ஈடுபட்டவர்களுக்கு இந்த தேர்தல் ஒரு சிறந்த பாடமாகும்" என தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT