ADVERTISEMENT

கேக் என நினைத்து எலி மருந்தைச் சாப்பிட்ட சிறுமி

10:13 AM Sep 13, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கேக் என நினைத்து எலி மருந்தைச் சாப்பிட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அருகே உள்ள வரிச்சிக்குடியைச் சேர்ந்த ராஜா- ஸ்டெல்லாமேரி தம்பதியின் 14 வயது மகள் தசை சுருக்க நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் இரண்டு ஆண்டுகளாக வீட்டில் இருந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் வீட்டில் இருந்த எலி மருந்தை கேக் என நினைத்து சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கோட்டுச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT