பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் மீதான மாட்டுத்தீவன மோசடி மீதான நான்காவது வழக்கிற்கு ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
லாலு பிரசாத் பீகார் மாநில முதலமைச்சராக இருந்த பொழுது போலி ரசீதுகள் கொடுத்து மாட்டுத்தீவனங்கள் வாங்கியதாக ஐந்து வழக்குகள் தொடுக்கபட்டது. அதில் மூன்று வழக்குகளில் அவர் குற்றவாளி என ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்த நிலையில்,
இன்று துக்மா மாவட்ட கருவூலத்திலிருந்து மூன்று கோடியே எழுபத்து ஆறு லட்சம் ரூபாய் பணம் பெற்ற வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளது. மேலும் இதனால் லாலுவின் ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Show comments