ADVERTISEMENT

ட்ரம்ப் பாதுகாப்பு - கைக்குழந்தையுடன் வேலை பார்த்த பெண் காவலருக்கு குவியும் பாராட்டு!

05:13 PM Feb 24, 2020 | suthakar@nakkh…

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு சென்ற ட்ரம்ப், அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதிரா கிரிக்கெட் அரங்கை பிரதமர் மோடியுடன் இணைந்து இருவரும் கூட்டாக திறந்து வைத்தனர். நாளை தில்லியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ட்ரம்ப் பங்கேற்கிறார்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


இந்நிலையில் இன்று அகமதாபாத்தில் ட்ரம்பின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலர் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் வேலை பார்த்த சம்பவம் பார்ப்பவர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இதற்காக அவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இடத்திற்கு அருகே இருந்த மரக்கிளையில் சேலையால் தொட்டி கட்டி தன்னுடைய குழந்தையை அதில் போட்டிருந்தார். காவலரின் குழந்தை சாலையில் மரக்கிளையில் தூங்கிய புகைப்படம் இன்று இந்திய அளவில் வைரலானது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT