ADVERTISEMENT

அயோத்தி தீர்ப்பு குறித்து ஷியா மதகுரு கல்பே ஜவாத் கருத்து...

03:55 PM Nov 09, 2019 | kirubahar@nakk…

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு வழங்கியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த தீர்ப்பின்படி, வக்பு வாரியத்திற்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும், வழக்குக்கு உட்படுத்தப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அமைப்பை அடுத்த 3 மாதத்தில் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஷியா முஸ்லீம் மதகுரு கல்பே ஜவாத், "உச்சநீதிமன்ற தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறோம்; மேல்முறையீடு செய்வது முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் உரிமை, ஆனால் இந்த விவகாரம் இத்துடன் நிறைவு பெற வேண்டும் என்று நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT