ADVERTISEMENT

ஜார்கண்டில் பசுக்குண்டர்கள் தாக்கி ஒருவர் பலி – இருவர் காயம்!

02:53 PM Sep 23, 2019 | santhoshkumar

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஜார்கண்ட் மாநிலத்தில் பசுவை கொல்ல முயன்றதாக மாற்றுத்திறனாளி மற்றும் இருவரை பசுக்குண்டர்கள் தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த மாற்றுத்திறனாளியான பர்லா மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜட்லங்கா கிராமத்தில் ஓடும் நதிக்கரை அருகில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. பசுவைக் கொன்றதற்கான அடையாளங்கள் ஏதுமில்லை. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஐவரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT