ADVERTISEMENT
ADVERTISEMENT
மூன்று வேளாண் சட்ட மசோதாக்களைத் திரும்பப் பெறக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி தொடர்ந்து விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளைப் பயங்கரவாதிகள் என நடிகை கங்கனா குற்றம்சாட்டியுள்ளார்.
''டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல. இந்தியாவைத் துண்டாட நினைக்கும் பயங்கரவாதிகள். துண்டாடப்பட்ட நாட்டை சீனா கைப்பற்றி, அமெரிக்காவைப் போல் சீன பகுதியாக மாற்ற முயற்சிக்கும். உங்களைப் போல் நாங்கள் நாட்டை விற்க மாட்டோம்'' என ரிஹானா என்ற அமெரிக்க பாடகிக்கு கங்கனா பதில் அளித்துள்ளார்.
'நாம் ஏன் விவசாயிகள் போராட்டம் பற்றி பேசுவதில்லை' என அமெரிக்க பாடகி ரிஹானா அண்மையில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் தற்போது நடிகை கங்கனா ரனாவத் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
ADVERTISEMENT
Show comments