ADVERTISEMENT

இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக் காலம் நீட்டிப்பு! 

09:05 PM Dec 30, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக் காலத்தை மத்திய அரசு நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தற்போது இஸ்ரோவின் தலைவராக இருக்கும் சிவனின் பதவிக்காலம் 2021, ஜனவரி 14-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அவரது பணிக்காலத்தை 2022, ஜனவரி 14-ஆம் தேதி வரை ஓராண்டு நீட்டித்து, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சந்திரயான்-1க்கு பின்னர் நிலவை ஆய்வு செய்ய, இந்தியாவின் இரண்டாவது விண்கலமான 'சந்திரயான்-2', 2019 ஜூலை 22 ஆம் தேதி நிலவை நோக்கி ஏவப்பட்டது. இந்த சந்திரயான்-2 திட்டம் நினைத்தபடி வெற்றிபெறவில்லை என்றாலும் அந்த திட்டத்தை முன்னின்று நடத்திய இஸ்ரோ தலைவர் சிவனை பிரதமர் மோடி தட்டிக்கொடுத்தது உலகளவில் பெரிதாகப் பேசப்பட்டது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT