ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி முந்தைய மார்ச் மாதத்தை விட 9.7% உயர்ந்து, சுமார் 2 கோடியே 8 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2018- ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இறக்குமதி செய்த அளவை விட அதிகம் என பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல், தேவை அதிகரிப்பு போன்றவையே இறக்குமதி உயர்வுக்கு காரணங்களாகக் கூறப்படுகிறது.
Show comments