ADVERTISEMENT

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அதிரடிப்படையினர் சுட்டுக்கொலை

09:25 AM Dec 31, 2018 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

காஷ்மீர் நவ்காம் பகுதியில் இந்திய எல்லையில், இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி திசை திருப்பி பாகிஸ்தான் அதிரடிப்படை ஊடுருவ முயற்சித்தனர். அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து அவர்களின் ஊடுருவலை முறியடித்தது. இதில் பாகிஸ்தானின் அதிரடிப்படையினர் இருவர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர். சுட்டுக்கொல்லப்பட்ட இருவரிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியவீரர்கள் மீது தாக்குதல் நடத்தி கவனத்தை திசை திருப்பி ஊடுருவ உதவிய பாகிஸ்தானின் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் அதிரடிப்படையினர் மற்றும் பயங்கரவாதிகள் கொண்ட அமைப்பே எல்லை அதிரடிப்படை குழு என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT