ADVERTISEMENT

இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கிய தினசரி கரோனா பாதிப்பு!

09:38 AM Jan 12, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் தற்போது நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு இரண்டு லட்சத்தை நெருங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 720 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில், கரோனா பாதிக்கப்பட்ட 442 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கடந்த 24 மணிநேரத்தில் 60 ஆயிரத்து 405 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளதாகவும் கூறியுள்ளது. அதேபோல் இந்தியாவில் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,868 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் 1,281 பேருக்கும், ராஜஸ்தானில் 645 பேருக்கும், டெல்லியில் 546 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதேநேரத்தில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட 4,868 பேரில் 1805 பேர் குணமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT