ADVERTISEMENT

சுதந்திர தின உரையில் என்ன பேச வேண்டும்? மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமர் மோடி!

06:43 PM Jul 19, 2019 | santhoshb@nakk…

இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரையை 6- வது முறையாக, ஆகஸ்ட் 15 ஆம் தேதி நிகழ்த்த உள்ளார். இந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் போது, மக்கள் தனது சுதந்திர தின உரையில் இடம் பெற வேண்டி கருத்துக்கள் குறித்து நமோ ஆப்பில் பரிந்துரைக்கலாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதற்காக நமோ ஆப்பில் ஒரு பிரத்யேக தளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 130 கோடி இந்தியர்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலான பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று தாம் விரும்புவதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT