The 75th Independence Monument will cost Rs 1.83 crore

Advertisment

இந்தியநாட்டின் 75வது சுதந்திர தினம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சிறப்பாகக் கொண்டாடப்படவிருக்கிறது. இந்த நிலையில், 75வது சுதந்திர தினத்தைச் சிறப்பாகக் கொண்டாட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

அந்த வகையில், சென்னை காமராஜர் சாலையில் 75வது சுதந்திர தின நினைவுத்தூண் ரூபாய் 1.83 கோடியில் அமையவுள்ளது. 75வது சுதந்திர தின விழாவை நினைவுப்படுத்தும் வகையில் நினைவுத்தூண் கட்டப்படுகிறது என தமிழ்நாடுஅரசு தெரிவித்துள்ளது. மேலும், ரூபாய் 1.83 கோடி மதிப்பில் நினைவுத்தூண் கட்டுவது குறித்து பொதுப்பணித்துறை டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது.

டெண்டர் எடுக்கும் நிறுவனம், ஒரு மாதத்திற்குள் நினைவுத்தூணைக் கட்டி முடிக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.