இன்று (05/07/2020) காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,48,315 -லிருந்து 6,73,165 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,655 -லிருந்து 19,268 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,94,227 -லிருந்து 4,09,083 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதித்த 2,44,814 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதேபோல் தமிழகத்தில் 1,07,001, டெல்லியில் 97,200, குஜராத்தில் 35,312, ராஜஸ்தானில் 19,532, மத்திய பிரதேசத்தில் 14,604, உத்தரப்பிரதேசத்தில் 26,554, ஆந்திராவில் 17,699, தெலங்கானாவில் 22,312, கர்நாடகாவில் 21,549, கேரளாவில் 5,204, புதுச்சேரியில் 802 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.