ADVERTISEMENT

இந்தியாவில் 4,421 பேருக்கு கரோனா !

09:10 AM Apr 07, 2020 | santhoshb@nakk…


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 4,281 லிருந்து 4,421 ஆக உயர்ந்துள்ளது.இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 லிருந்து 114 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 319 லிருந்து 326 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT


இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 748, தமிழகத்தில் 621, டெல்லியில் 523, கேரளா 327, தெலங்கானா 321, உத்தரப்பிரதேசம் 305, ஆந்திரப்பிரதேசம் 266, ராஜஸ்தானில் 288 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT