ADVERTISEMENT

தூங்கிக் கொண்டிருந்த மனைவியை ரயில் முன் தூக்கியெறிந்த கணவன்... அதிரவைக்கும் சிசிடிவி காட்சி!

05:31 PM Aug 23, 2022 | kalaimohan

ADVERTISEMENT


தொழில்நுட்ப வசதிகள் வளர்ந்துவிட்ட இந்த காலகட்டத்தில் பொதுவெளியில் நடக்கும் தவறுகளை அப்பட்டமாக வெளிச்சம்போட்டு காட்டுகிறது சிசிடிவி காட்சிகள்.அப்படி ரயில் நிலையத்தில் நடைமேடையில் உறங்கிக்கொண்டிருந்த மனைவியை கணவன் ரயில் முன் தூக்கி எறிந்து கொலை செய்யும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தானின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் இரவு வேளையில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த கணவன் ரயில் வரும் நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை தரதரவென இழுத்துச் சென்று தண்டவாளத்தில் தூக்கி எறிந்துவிட்டு, இரண்டு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தான். இந்த சம்பவத்தில் ரயில் மோதி அந்த தாய் உடல் சிதறி உயிரிழந்தார். 30 வயது மதிக்கத்தக்க அந்த நபரை போலீசார் தேடிவருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT