ADVERTISEMENT
ADVERTISEMENT
நாட்டு மக்கள் அனைவரும் வரும் ஆகஸ்ட் 13- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15- ஆம் தேதி வரை தங்கள் வீட்டில் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டின் 75- வது சுதந்திர நாளைக் கொண்டாடும் விதமாக, சுதந்திர ஆண்டின் அமுத பெருவிழா என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிலையில், சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் ஆகஸ்ட் 13- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15- ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தேசிய கொடியை ஏற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த இயக்கம் தேசிய கொடியுடனான நமது இணைப்பை மேலும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
Show comments